புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆராயப்படாத சிகரத்திற்கு தேசிய மலையேறும் பயிற்சி நிறுவனத்தின் (நிமஸ்) குழு சாகசப் பயணத்தை மேற்கொண்டது.
அவர்கள் 20,942 அடி உயரத்தில் அதன் உச்சியை வெற்றிகரமாக அடைந்தனர். பின்னர் இந்த சிகரத்திற்கு ஆறாவது தலாய் லாமாவின் நினைவாக சாங்யாங் கியாட்சோ என்று பெயரிடப்பட்டது.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், “ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) சீனாவை சேர்ந்தது. அந்த பகுதியில் உள்ள இடத்திற்கு இந்தியாவின் பெயரை வைப்பது சட்டவிரோதமானது.
இது சீனாவின் நிலைப்பாடு,” என்றார்.