March 28, 2024

கொடிய விஷத்தன்மையையும் முறிக்கக் கூடிய தன்மை கொண்ட வசம்பு

சென்னை: வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் முறிக்கக் கூடியது அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். வசம்பை தூள் செய்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர, எல்லா வகையான தொற்றுநோய்களும் நீங்கிவிடும்.

இது எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று தேக்கரண்டி கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்துவிடும்.

வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் சிறிதளவு பூசி வர, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும். பாட்டி வைத்தியத்தில் இடம் பெறும் மருந்துகளில் பிரதான இடம் வசம்புக்கு உண்டு. கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி வசம்பைச்சுட்டு, அந்தக் கரியைப் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

இதனால், குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இதற்கு, பிள்ளை வளர்ப்பான் என்ற இன்னொரு பெயரும் உண்டு. தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதனுடன் கறிவேப்பிலை, மஞ்சள்தூள் வசம்புத் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு, கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம். ஆனால், இதை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வசம்புடன் மஞ்சளை வைத்து சிறிது நீர் தெளித்து மையாக அரைத்து தேள், பூரான், வண்டுக்கடியில் பூசி வர விஷம் முறியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!