வெங்கட்பிரபு சம்பளத்தை பாதியாக குறைத்த ஏஜிஎஸ் நிறுவனம்!
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவதற்குள் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்திற்காக விஜய் இதுவரை இல்லாத சம்பளத்தை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு தான் கேட்ட சம்பளத்தில் பாதியை மட்டும் தர சம்மதித்துள்ளார்.
இந்த படத்திற்கு வெங்கட் பிரபு 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், ஆனால் கஸ்டடி படத்தின் நஷ்டத்தை காரணம் காட்டி 10 கோடி ரூபாய் சம்பளமாக இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.