குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம்-காரணம்?
ஏர் இந்தியா இந்தியாவின் தேசிய விமானசேவை நிறுவனம் ஆகும். பயணிகள், பொதிகள் சேவைகளை வழங்கும் இந்நிறுவனம் மும்பாயின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றது .
ஏர் இந்தியா மீது நடிகை குஷ்பு புகார் அளித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு குஷ்புவின் காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘முட்டியில் அடிபட்ட ஒருவரை அழைத்துச் செல்ல உங்களிடம் சக்கர நாற்காலி கூட இல்லை.
வேறு நிறுவனத்திடம் கேட்கிறார்கள் என்று கூறிய அவர், கடும் வலியுடன் அரை மணி நேரம் காக்க வைத்ததாகவும் கூறினார். இதற்காக குஷ்புவிடம் ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது என்றும் கூறினார்.