March 28, 2024

புகையிலை சாகுபடியை தடை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

உலக அளவில் புகையிலை உபயோகிப்பதிலும், புகைப்பிடிப்பதிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகில் புகையிலையால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

புகையிலை சாகுபடி இந்தியாவின் மொத்த சாகுபடி பரப்பளவில் 0.27% மட்டுமே, அதாவது 4.5 லட்சம் ஹெக்டேர். ஆனால் அதுவே இந்தியாவிலும் உலகிலும் ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் இறப்புகளுக்குக் காரணம். உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டபடி அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் புகையிலை சாகுபடியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகையிலை விவசாயிகளை மாற்றுப் பயிர்களுக்கு மாற்ற மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து சிறப்புத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். மாற்றுப் பயிர்களுக்கு மாறும் விவசாயிகளுக்கும் அரசு ஊக்கத்தொகை வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!