March 29, 2024

‘அயலி’ வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு

சென்னை: அயலியை தனிப்பட்ட முறையில் தங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள். அதுதான் எனக்கு முக்கியம். ஒரு பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்று நினைக்கும் போது, அந்தப் பெண்ணுக்கு நானே பிரச்சனையைக் கொடுத்துவிட்டேனே என்று நினைக்கும் போது அந்த குற்ற உணர்வைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டேன் என்று அயலியின் உருவாக்கம் மற்றும் அதன் தாக்கம் குறித்து இயக்குநர் முத்துக்குமார் தெரிவித்தார்.

‘அயலி’ என்ற வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர் குறித்து அதன் இயக்குனர் முத்துக்குமார் கூறியதாவது:- “குழந்தை திருமணங்கள் இன்றும் நடக்கின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டோம்.

நானும் அப்படித்தான் இருந்தேன். நான் சென்னையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறேன். கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகம். இங்குள்ள பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருப்பதாக நினைத்தேன்.

ஆனால் என் நண்பர் ஒருவர், பருவமடைந்து 6 மாதமான பெண் ஒருவருக்கு திருமணம் நடந்திருக்கிறது என்றார். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இன்று இவ்வாறான செயற்பாடுகள் பிற்போக்குத்தனமாகவும் சாதிய ரீதியாகவும் செய்யப்படுகின்றன. வெளியே தெரியவில்லை” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!