மேகதாது அணை விவகாரம்… பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: முதல்வர் எழுதியுள்ள கடிதம்… மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்து காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசு கைவிட வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எவ்வித அனுமதியும் வழங்க கூடாது என வலியுறுத்தினார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து விவாதிக்க மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்க கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்,மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும்,காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் வழங்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.