ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் அலுவலகம் திரும்புவது பற்றிய முடிவு குறித்து எலான் மஸ்க் கருத்து

கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் வர வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்கள் ஊழியர்கள் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என ஆப்பிள் வலியுறுத்தி இருப்பதாக கூறப்பட்டது.
இருப்பினும், கொரோனா அதிகரித்து வருவதையடுத்து ஊழியர்கள் அலுவலகம் திரும்ப மேலும் சில காலம் ஆகும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து எலான் மஸ்க் கூறுகையில், உங்களின் உடற்பயிற்சி ஆடைகளை உடுத்திக் கொண்டு, டி.வி. பாருங்கள் என்று கூறியுள்ளார். உடற்பயிற்சி ஆடைகளை அணிந்து கொண்டு டி.வி. பார்ப்பதால் யாருக்கும் எந்த பயனும் இருக்க முடியாது என்பதையே எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து பணியாற்ற கட்டாயப்படுத்தவில்லை. எனினும், வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டம் குறித்து ட்விட்டர் ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வேளை முந்தைய திட்டப்படி ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் பட்சத்தில், இந்த விவகாரம் குறித்து எலான் மஸ்க் வேறு முடிவுகளை எடுக்கலாம்.