ஜடேஜாவை தூக்கிய மாதிரி தோனி யாரையும் இப்படி செய்தது இல்லை… ஹர்பஜன் சிங் ட்வீட்
ஐபிஎல்: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கடைசி 2-வது இடத்தை பிடித்த சிஎஸ்கே இந்த முறை மகுடம் சூடியுள்ளது. முன்னாள் வீரர்களின் ப்ளே ஆஃப் கணிப்பில் இல்லாத சிஎஸ்கே. பிளே ஆப்-க்குள் நுழைந்து கெத்தாக ஃபைனலுக்கு சென்றது. யூகங்களை எல்லாம் பொய்யாக்கி தோனி மீண்டும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
சிஎஸ்கேவின் வெற்றிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பதிவில், “ ரவீந்தர் ஜடேஜா தி சாம்பியன். 5-வது முறையாக கோப்பையை வென்ற தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகள்.
இது நம்ப முடியாத சேஸ் இந்த படங்களே பேசும். ஜடேஜாவை தூக்கிய மாதிரி தோனி யாரையும் இப்படி செய்தது இல்லை. இந்த 5-வது ட்ராபி தோனிக்கும் அவரது அணிக்கும் முக்கியமானது.:” எனப் பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது ட்வீட்டர் பதிவில், ஐபிஎல் சீசன் எவ்வளவு அற்புதமாக முடிந்துள்ளது. குஜராத் , சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் துணிச்சலாக விளையாடினர். ஆட்டத்தை கடைசி பந்து வரை கொண்டு சென்றனர்.
வெற்றி பெற்ற சென்னை அணிக்கு வாழ்த்துகள். கடைசி பந்து வரை போராடிய குஜராத்தை பாராட்ட வேண்டும். என்ன செய்வது ஒருவர் தானே வெற்றி பெற முடியும். ஆனால் இரு அணிகளும் மனதை வென்று விட்டனர் என சச்சின் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பதிவில், ஞாயிறு இரவு தொடங்கி செவ்வாய் அதிகாலை மேட்ச் முடிச்சுட்டாங்க. ஸ்பெஷல் ஃபைனல் தான். தோனி அடுத்த சீசனும் வருவார் என நம்புவோம். சிஎஸ்கேவுக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.