ரகசிய ஒப்பந்தப்படி மோடியின் வழிகாட்டுதலின் கீழ் மம்தா பேசுகிறார் – காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயரை கெடுக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் மோடியின் விருப்பப்படி மம்தா பானர்ஜி பேசுகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயரை கெடுக்க அவர்கள் இருவருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது. மம்தா பானர்ஜி. அமலாக்க இயக்குநரகம், சிபிஐ விசாரணையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறார். அதனால், அவர் காங்கிரஸுக்கு எதிராகப் பேசுகிறார். இது பிரதமருக்கு மகிழ்ச்சியைத் தரும்.
முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி கூட்டம் நடைபெற்றது. மம்தா பானர்ஜி, “ராகுல் காந்தியின் சமீபத்திய லண்டன் உரைக்காக நாடாளுமன்றத்தை முடக்கி ராகுல் காந்தியை ஹீரோவாக்க பாஜக வேண்டுமென்றே முயற்சிக்கிறது. பாஜக தனது சொந்த நலனுக்காக இதைச் செய்கிறது. இதன் மூலம் மற்ற எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி கேள்வி கேட்க முடியாது. ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் நாயகனாக்க வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்கிறார்கள்
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முர்ஷிதாபாத், மல்சா பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க வைச் சேர்ந்த 2,000 தொண்டர்கள் வெளியேறி காங்கிரசில் இணைந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்திருந்தார். 2018 மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலின் போது, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதில், 12 பேர் பலியாகினர்.