தமிழகத்திற்கு புலம்பெயரும் வட மாநிலத் தொழிலார்கள் ..
சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து இந்தியா திரும்பிய கேரளாவைச் சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மார்ச் 23, 2020 முதல் கேரள மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மார்ச் 25 முதல் இந்தியா முழுவதும் முழு ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது.
நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர், அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டார். கண்ணுக்கு தெரியாத வைரஸ் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்தது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். நாடு முழுவதும் ஸ்தம்பித்ததால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
அப்போது, கோடை வெயிலில் தார் சாலைகளிலும், ரயில் தண்டவாளங்களிலும், தங்கள் உடைமைகளை, குழந்தைகளை தோளிலும் கையிலும், வீங்கிய கால்களையும், கிழிந்து ரத்தம் வழியும் பாதங்களையும் சுமந்து கொண்டு கூட்டம் கூட்டமாய் சொந்த ஊர் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல், காவல் துறையின் கட்டுப்பாடுகள், பிரதமரின் முறையீடு, அரசின் உத்தரவுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் இந்தியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால், வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகம் வந்து, மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக உயரமான கட்டிடங்கள் கட்டுவது, திறமையற்ற விவசாய வேலைகள், அபாயகரமான தொழிற்சாலை வேலைகள், பின்னலாடைகள், செங்கல் சூளைகள், உணவகங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள், தேநீர் கடைகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் மாத ஊதியத்திற்காகவும் தினக்கூலிகளாகவும் வாழ்க்கைப் போராட்டம் நடத்துகின்றனர் வட மாநிலத் தொழிலாளர்கள்.