October 1, 2023

அண்ணாமலை மீது நடவடிக்கை… அதிமுக கூட்டத்தில் வலியுறுத்தல்?

சென்னை: அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க பாஜக தலைமைக்கு வலியுறுத்த வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும், கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழான அண்ணாமலை கூறும்போது, “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் சிக்கித் தவித்தன. முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.

அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றும் வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

மேலும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க பாஜக தலைமைக்கு வலியுறுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பரிசீலனை செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!