இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி அத்துமீறும் பாகிஸ்தான் ட்ரோன்கள்
பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஆளில்லா விமானம் மூலம் 3.2 கிலோ ஹெராயின் கடத்திய நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
மே 27-28 இடைப்பட்ட இரவில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள தானோ குர்ட் கிராமத்திற்கு அருகே, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆளில்லா வான்வழி வாகனத்தை சுட்டு வீழ்த்தினர் மற்றும் ஒரு கடத்தல்காரரை கைது செய்தனர்.
இதுகுறித்து சஞ்சய் கசூர் டிஐஜி,கூறுகையில், “3.2 கிலோ எடையுள்ள மூன்று போதைப்பொருள் (ஹெராயின்) பாக்கெட்டுகள் மீட்கப்பட்டன. பிஎஸ்எஃப் வீரர்கள் மற்றொரு இடத்தில் மற்றொரு ஹெராயின் சரக்குகளை மீட்டுள்ளனர்.” என்றார். மேலும் கடத்தல்காரரை விசாரித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிஎஸ்எஃப் டிஐஜி கவுர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் எல்லையை கடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை BSF இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. பிஎஸ்எஃப் வீரர்கள் ஆளில்லா விமானத்தை மீட்டு போதைப் பொருட்களை மீட்டதாக பஞ்சாப் எல்லைப் பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.