April 20, 2024

10 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்பி பதவியை இழந்தார். அவர் உடனடியாக தனது சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.

அவர் அமெரிக்கா செல்வதால் புதிய சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவர், தடையில்லா ஆதாரம் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். புகார்தாரர் சுப்ரமணிய சாமி சாட்சியம் அளிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்திக்கு 3 ஆண்டுகளுக்கு தடையில்லா பாஸ்போர்ட்டை நீதிமன்றம் வழங்கியது. அதன்படி நேற்று ராகுல் காந்தி பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று இரவு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை அடைந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தி வாஷிங்டன் மற்றும் நியூயார்க்கிற்கும் செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!