April 25, 2024

3வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று மூன்றாவது நாளாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை இந்திய பங்குச்சந்தை துவங்கியதும், மும்பை பங்குச்சந்தையின் நிஃப்டி 130 புள்ளிகள் சரிந்து 61,300 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 53 புள்ளிகள் சரிந்து 18,076 புள்ளிகளில் வர்த்தகமானது. வரும் நாட்களில் பங்குச்சந்தை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் தகுந்த முதலீட்டு ஆலோசகர்களை கலந்தாலோசித்து அதன்பிறகு முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில் நீண்ட கால முதலீடாக பங்குச்சந்தை சிறப்பான வருமானத்தை தருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!