தமிழகத்தில் ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும்… மத்திய அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ் கற்க வேண்டும்… தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். இந்த ரயில் பெட்டிகள் 160 கி.மீ வேகத்தை தாங்கக்கூடிய திறன் பெற்றவை. இந்த தொழிற்சாலையில் 102 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இத்தொழிற்சாலையில் தயாரிக்க செய்யப்பட்ட 12 ஆயிரமாவது ரயில் பெட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன் பின் பேசிய அமைச்சர், ‛ரயில்வே தனியார்மயமாக்கப்படாது.
தொழிநுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.