100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்
புதுச்சேரி:
மங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருக்காஞ்சியில் இணைப்பு கால்வாய் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.12 1/4 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இப்பணியை அமைச்சர் தேனீஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
அப்பகுதி கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் ரூ.280 ஊதியம் வழங்க வலியுறுத்தினார்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வைசாக்பாகி, உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர்கள் ராமநாதன், செங்கதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.