நாளை ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா- வங்கதேசம் இந்தியா மோதல்
மர்பூர்: கிரிக்கெட் 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா? வங்கதேசத்துடன் நாளை ஹாட்ரிக் வெற்றியுடன் சிட்டகாங்கில் 3வது போட்டியில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்ய ஆர்வமாக உள்ளது,
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்கதேசம் சென்றுள்ளது. மிர்பூரில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – வங்கதேசம் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டகாங்கில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. குறைந்தபட்சம் இந்தப் போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் தருமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். காயம் அடைந்த கேப்டன் ரோஹித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தலைமை பொறுப்பேற்பார்.
தீபக்ஷகர் மற்றும் குல்தீப் சென் ஆகியோரும் காயங்களுடன் வெளியேறியுள்ளனர். ஹாட்ரிக் வெற்றியுடன் 3வது போட்டியில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்ய வங்கதேசம் ஆர்வமாக உள்ளது நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.