புதுச்சேரி போக்குவரத்து துறை அறிவித்துள்ளதின்படி, 2025 ஜனவரி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆகிறது. டூவீலர் ஓட்டுநர்கள் மற்றும் பில்லியன்ரைடர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
புதுச்சேரியில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்கள் பலர் உயிரிழந்துள்ளதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017-ல், முதன்முதலாக ஹெல்மெட் கட்டாயம் செய்யப்பட்டது. ஆனால், கடுமையான எதிர்ப்பு காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.2022-ல், நீதிமன்ற உத்தரவுப்படி ஹெல்மெட் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கினார். ஆனால், பல தரப்பினர் மக்கள் பிரதிநிதிகளிடம் அழுத்தம் கொடுத்ததால், அதிகாரிகள் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.
தற்போதைய விபத்துச் சூழல் காரணமாக போக்குவரத்து போலீஸார் கட்டாயமாக ஹெல்மெட் அணிவதை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.இதை மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விளக்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து புரிதல் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஹெல்மெட் அணியாமல் டூவீலர் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பில்லியன்ரைடர்களுக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த நடவடிக்கை, பாதுகாப்பு நோக்கத்திற்காக தேவையானதெனவும், மக்கள் உயிரைக் காக்கும் நடவடிக்கையாகவும், போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.