தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தொடங் கப்பட்ட “நடப்போம் நலம்பெ றுவோம் ”என்கின்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை மாதந்தோறும் முதல் ஞாயிறன்று தொடர்ந்து தஞ்சை அன்னை சத்தியா விளையாட்டு திடல் நடை பயிற்சியாளர் சங்கத்தினர் மாநகர சுகாதார துறையுடன் இணைந்து நடத்தி வருகின்ற னர்.
அதன்படி இன்று (ஞாயிற்றுகிழமை) 17-வது மாதமாக 8 கிலோ மீட்டர் தூர ஆரோக்கிய நடை பயிற்சி மேற்கொண்டனர்.
இந்த நடைப்பயிற்சியை ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர், பிளாசம் பள்ளியின் தாளாளர் அழகப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மேயர் சண்.ராமநாதன், நடைபயிற்சியா ளர்கள் சங்க கவுரவ தலைவர் து.செல்வம், முன்னாள் கலை பண்பாட்டு துறை துணை இயக்குநர் குணசேகரன் , மாநகர சுகாதாரத்துறை அலுவலர் நமச்சிவாயம், நடைபயிற்சியாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் ஜெயக்குமார், துணைத்தலைவர் கண்ணாடி குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நடைபயிற்சியில், இளை ஞர்கள், மாணவர்கள் மகளிர் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகத்து டன் பங்கேற்று புதியபேருந்து நிலையம் வரை சென்று, மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு திடலை வந்தடைந்தனர். நிறைவாக உடல்நலம், மனநலத்தை காக்கும், நடைபயிற்சியில், பங்கேற்ற அனைவருக்கும் ஆரோக்கிய சிற்றுண்டியான சுண்டல் வழங்கப்பட்டது.முடிவில் இளங்கோ நன்றி கூறினார்.