April 18, 2024

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை,

தமிழகத்தில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச், 13ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடக்கிறது. அதே போல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 14ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடக்கிறது.இந்நிலையில், அறிவியல் பாடங்களுக்கான, செய்முறை தேர்வு மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.

இது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ள தேர்வுத்துறை, இம்மாதம் 31ஆம் தேதி சென்னையில் பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தலா 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் இரண்டு தேர்வுகளிலும் 10 லட்சம் பேர் செய்முறை தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!