திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தரகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்த பரிசோதனை நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தரிசன டிக்கெட்டை விரைவாக பரிசோதனை செய்து அனுமதிக்கும் முறை பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இதன் செயல்பாடுகள் இதில் உள்ள குறைபாடுகள் மேலும் இதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அறங்காவலர் குழுவில் ஆலோசித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.