சபரிமலை கோயிலுக்கு வந்து மலைபாதையில் ஏறும்போது ஏற்படும் உடல்நல குறைபாடுகளால் உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் விருப்ப அடிப்படையில் ரூ.10 வசூலிக்க முடிவு செய்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு.
ஒவ்வொரு ஆண்டும், சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பக்தர்களில் பலர் இதய நோய், சுவாச கோளாறு போன்ற காரணங்களால் உயிரிழக்கின்றனர்.கடந்த ஆண்டு மட்டும் 48 பேர் இதய நோயால் உயிரிழந்தனர்.
இதனை தடுக்கும் வகையில், ஆட்டோமேட்டிக் எக்ஸ்டெர்னல் டிபைபிரிலேட்டர் (AED) கருவிகள் பயன்பாட்டில் வருகிறது.
முதல் கட்டமாக, பம்பை முதல் அப்பாச்சி மேடு வரையிலான இடங்களில் 5 AED கருவிகள் நிறுவப்படுகின்றன.
இதன் மூலம், இதய பாதிப்பு ஏற்பட்ட 10 நிமிடங்களுக்குள் உதவி செய்ய முடியும், மேலும் மரணத்தை 80% குறைக்கலாம்.
ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ.10 விருப்ப நிதி கேட்கப்படும்.இது கட்டாயம் அல்ல; விருப்பமுள்ளவர்கள் மட்டும் செலுத்தலாம்.இந்த நிதி மூலம், இதய நோய் போன்ற காரணங்களால் உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
இந்த முயற்சி மூலம் சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், உடல்நல பாதிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.