தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென பாய்வதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள்.
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை பணிகள் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டு, இதுவரை 3,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் மீண்டும் அதே இடத்துக்கு விடப்பட்டதால், அவற்றை சாலையில் திரியும் நாய்களிடையே வேறுபடுத்துவது சிக்கலாக இருந்தது.
தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டை அணிவிக்க, அவற்றை இரவில் வாகன ஓட்டிகள் எளிதில் கவனித்து விபத்துகளை தவிர்க்க முடியும்.இந்த திட்டம் ஜனவரி முதல் வாரம் செயல்படுத்தப்படும்.
மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் கருத்தடை செய்யப்பட்ட நாய்களை வேறுபடுத்தவும், இரவில் வாகன விபத்துகளைத் தடுக்கவும் ஒளிரும் பட்டை அவசியமாகிறது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என கூறினார்
இந்த புதிய முயற்சி, தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினைகளை குறைத்து, நகர மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.