விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாசிட்டிவ் ஹியூமர் ஷோ ‘குக் வித் கோமாளி’ இதுவரை ஐந்து வெற்றிகரமான சீசன்களை நடத்தி, ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. இப்போது, ஆறாவது சீசன் மே 4ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்க இருப்பதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முந்தைய சீசன்களில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாக பணியாற்றினார்கள். ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட் விலகியதால், அவரது இடத்தை மாதம்பட்டி ரங்கராஜ் நிரப்பினார். அதே சமயம், தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் போட்டியாளர் பிரியங்கா இடையே ஏற்பட்ட முரண்பாடின் காரணமாக, மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
ஆறாவது சீசனில், ‘பிக் பாஸ்’ புகழ் சௌந்தர்யா கலந்து கொள்ளவுள்ளார். இவருடன், கோமாளிகளாக புகழ், ராமர், சுனிதா மற்றும் சரத் மீண்டும் கலகலப்பை ஏற்படுத்தவுள்ளனர். இந்த சீசனில் தாமு மற்றும் ரங்கராஜுடன் மூன்றாவது நடுவராக கௌஷிக் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ஆம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 6, மற்ற சீசன்களிடமும் ஒத்துழைக்கப்பெற்று கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.