தளபதி விஜய்யுடன் சில படங்களில் நடித்துள்ள நடிகை ரம்பா, இன்று தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விஜய்யை சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மின்சார கண்ணா, என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய் போன்ற சில படங்களில் விஜய்யும் ரம்பாவும் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது, அப்போது இந்த ஜோடி அழகாக இருந்தது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை ரம்பா கன்னட தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு சினிமா துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு கனடாவில் செட்டிலாகி அவ்வப்போது இந்தியாவுக்கு மட்டும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்யை குடும்பத்துடன் சந்தித்ததாக தெரிவித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.