பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் சார்ந்த மூன்று பாகங்களின் படம் தற்போது இரு பாகங்களாக கொள்ளப்பட்டு படமாக்கப்படுகிறது. இதில் ரன்மீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், கேஜிஎஃப் புகழ் யாஷ் ராவணனாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார். அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங், கைகேயியாக லாரா தத்தா நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள். படப்பிடிப்புகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. ரன்மீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள முதல் பாக காட்சிகள் முடிக்கப்பட்டு, பின்னர் யாஷ் நடித்துள்ள காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், யாஷ் தனது சமூக ஊடகத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் “ராமன், ராவணின் அழியாத கதையைக் காணத் தயாராகுங்கள். ராமாயணம். நமது உண்மை, நமது வரலாறு. ஐமேக்ஸில் படமாக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து சிறந்த உலகை அமைப்பதற்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ராமாயணம் படம் உலகம் முழுவதும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ், ஹிந்தி மற்றும் பல மொழிகளில் வெளிவரும் இந்த படம் பார்வையாளர்களுக்கு பிரமாண்ட அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.