புதுடெல்லி: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 88 ரோஹிங்கியா மற்றும் வங்கதேச அகதிகளை ரயில்வே போலீசார் கைது செய்தனர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் செபஹிஜாலா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அமைந்துள்ளது.
இதனுடன், நமது அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதை தடுக்கும் வகையில் எல்லையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 88 ரோஹிங்கியா மற்றும் வங்கதேச அகதிகள் திரிபுரா மற்றும் வடகிழக்கு எல்லையில் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது: ஜூன் மாதம் 47 பேரை கைது செய்தோம். ஜூலை மாதத்தில் இதுவரை 41 பேரை கைது செய்துள்ளோம்.
அவர்களில் பெரும்பாலானோர் உரிய ஆவணங்கள் இல்லாததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகர்தலாவில் பிடிபட்ட அகதிகள், தாங்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும், ரயிலில் கொல்கத்தாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். குறிப்பாக அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் பல அகதிகளை பிடித்தோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.