சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று பொது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளத் தவறியவர்களுக்கான பொறியியல் துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களில் 20,662 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டபடி, அவர்களுக்கான துணை சேர்க்கை செயல்முறை நேற்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வு செய்ய இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வு செய்தவர்களுக்கு நாளை காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு உத்தரவுகள் வழங்கப்படும்.
நாளை மாலை 7 மணிக்குள் அதை உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 24-ம் தேதி காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீட்டு உத்தரவுகள் வழங்கப்படும்.