சென்னை: தனித்தனியாக நடித்து வந்த கணவன், மனைவி இப்போது புதிய சீரியலில் ஜோடி போடப் போறாங்களாம். யார் தெரியுங்களா?
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தொடர் திருமணம். இதில் சித்து, ஸ்ரேயா ஜோடியாக நடித்தனர். 2020ம் ஆண்டு இந்த தொடர் முடிவுக்கு வந்தது. திருமணம் தொடரில் நடிக்கும் போது சித்து மற்றும் ஸ்ரேயா இடையே காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் செய்துகொண்டார்.
சித்து, விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2ம் பாகத்தில் நாயகனாக நடித்தார். ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற தொடரில் நாயகியாக நடித்தார். பின் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்கள் பதிவிட்டு வந்தனர். இப்போது இருவரும் ஒன்றாக புதிய தொடர் ஒன்றில் சேர்ந்து நடிக்க உள்ளனராம்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை யாத்ரா மீடியா தான் தயாரிக்க உள்ளனராம். தற்போது இந்த புதிய சீரியலின் புரொமோ ஷுட் நடந்துள்ளதாம்.