புது டெல்லி: புல்லட் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களை மேற்கொள்ள சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தற்போது, சீனா மற்றும் ஜெர்மனியிலிருந்து சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் வாங்கப்படுகின்றன. குறிப்பாக, ஜெர்மனியின் ஹெர்ரென்க்னெக்ட் நிறுவனத்திடமிருந்து அதிக இயந்திரங்கள் வாங்கப்படுகின்றன.
ஜெர்மனியின் ஹெர்ரென்க்னெக்ட், சீனாவின் குவாங்சோ, வுஹான் மற்றும் செங்டுவில் பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் கூறியதாவது:- ஜெர்மனியின் ஹெர்ரென்க்னெக்ட் சீன ஆலையில் இருந்து மூன்று சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீன சுங்க அதிகாரிகள் வேண்டுமென்றே சுரங்க இயந்திரங்களின் நுழைவைத் தடுத்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2 சுரங்க இயந்திரங்கள் சமீபத்தில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. 3-வது சுரங்க இயந்திரம் விரைவில் இந்தியாவை வந்தடையும். சீன முற்றுகையை முறியடிக்க, ஹெர்ரென்க்னெக்ட் சார்பாக இந்தியாவில் ஒரு புதிய ஆலை அமைக்கப்படும்.
சுரங்க இயந்திரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். ஒரு காலத்தில் உற்பத்திக்காக சீனாவையும், பாதுகாப்பிற்காக அமெரிக்காவையும், எரிசக்திக்காக ரஷ்யாவையும் நாம் நம்பியிருந்தோம். இதை மாற்ற முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பிலிப் அக்கர்மேன் கூறினார்.