சென்னை: செவ்வாழையின் பயன்கள்… உடலுக்கு பல்வேறு ஆற்றலை அளிக்கக்கூடிய செவ்வாழையில் மிக முக்கிய உயிர்ச்சத்துக்களும், வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு சருமத்தையும் பளபளப்பாக உதவியாக இருக்கும். வாழைப்பழங்களை சாப்பிடுவதன் மூலமாக மட்டுமல்ல, நாம் கீழே தூக்கி எறியும் வாழைப்பழத் தோலை வைத்து முகத்தை ஜொலிப்பாக்க முடியும்.
முதலில் செவ்வாழையின் வாழைப்பழத்தோலை எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸியில் அரைத்து முகத்தில் தடவவும். இல்லையென்றால் வாழைப்பழத் தோலை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்த பின்னதாக முகத்தில் லேசாக மசாஜ் செய்யவும். பின்னர் நன்கு காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும்.
வாழைப்பழ தோலில் உள்ள வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கவும், முகம் எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும். இந்த செவ்வாழை பழத்தோல் அல்லது செவ்வாழை பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் வாழைப்பழ பேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு தினங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இது முகத்திற்கு இயற்கையான முறையில் ஜொலிப்பைத் தருவதற்கு உதவியாக இருக்கும். மேலும் படிக்க:நாள் முழுவதும் அழகாக இருக்க வேண்டுமா? இந்த இரவு நேர தோல் பராமரிப்பு குறிப்புகளை கட்டாயம் பின்பற்றுங்கள்!
செவ்வாழையில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி 6 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பருவ காலங்களில் பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மேலும் சிறுநீரக கற்களைத் தடுக்கவும், அஜீரண கோளாறுகளை சரி செய்யவும், உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது. தொடர்ச்சியாக உணவு முறையில் செவ்வாழையை சேர்த்துக் கொள்ளும் போது பார்வைத் திறன் மேம்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.