நாகை: வரும் 29ம் தேதி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய கொடியேற்று விழா நடப்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 29ம் தேதி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.