தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். செப்டம்பர் 23ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது.இதற்கான இடமாக விக்கிரவாண்டி சுங்கம் அருகே உள்ள வி.சாலை கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பஸ்சி ஆனந்த் மனு அளித்துள்ளார். முன்னதாக மதுரையில் முதல் மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் திருச்சி ஜி கார்னர் பகுதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தற்போது புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாட்டுக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் கொடி கடந்த 22ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள், இரண்டு போர் யானைகள், ஒரு வாகய மலர் மற்றும் 28 நட்சத்திரங்கள் உள்ளன.
இந்த கொடியின் பின்னணியில் வரலாற்று முக்கியத்துவம் உள்ளதாக விஜய் கூறியுள்ளார். இதுகுறித்த முழுமையான தகவல்கள் கட்சியின் முதல் மாநாட்டிலேயே அறிவிக்கப்படும் என்றார்.