சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், செந்துறை கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, நீலகிரி மாவட்டம் சோலையாறு, மதுவட்டம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையில் தலா 1 செ.மீ. தமிழகத்தை நோக்கி வீசும் மேற்குக் காற்றின் வேகத்தில் மாறுபாடு உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் ஓரிரு இடங்களில் இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.