உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பலர் திருமலைக்கு நேரடியாக பேருந்துகள் மற்றும் கார்கள் மூலம் வருகை தருகின்றனர், ஆனால் சிலர் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மேட்டு நடைபாதை வழியாக நடக்க விரும்புகிறார்கள்.
பக்தர்கள் ஓய்வெடுக்க தேவஸ்தானம் வசதி செய்து கொடுத்துள்ளது. இருப்பினும், சமீபகாலமாக மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுத்தை தாக்கி சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து 5 சிறுத்தைகளை வனத்துறையினர் பிடித்தது பக்தர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பாதையில் செல்லும்போது தனியாக செல்லக்கூடாது, குழுவாக செல்ல வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்து, விலங்குகளிடம் இருந்து காக்க கம்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. நேற்றிரவு ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் சிறுத்தையை கண்டு கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் அச்சமடைந்தனர். நாய்கள் சிறுத்தையை விரட்டியதால் மீண்டும் காட்டுக்குள் சென்றது.
தற்போது பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் திருப்பதிக்கு வருமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.