ராமநாதபுரம்: தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெழுத்தி மீன்களை அழித்து ராமநாதபுரம் மாவட்ட கிராம இளைஞர்கள் புதைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் கண்மாயில் ஆப்பிரிக்கா கெழுத்தி வளர்க்கப்பட்டு வந்தது.
இந்த மீன்கள் தடை செய்யப்பட்டவை ஆகும். இதையடுத்து இரண்டு டன் எடை அளவிலான தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கா கெழுத்தி மீன்களை கிராம இளைஞர்கள் மீன்பிடி வலை மற்றும் தடியால் அடித்து பிடித்து ஜேசிபி இயந்திர உதவியுடன் குழிதோண்டி புதைத்து அழித்தனர்.