கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அசோகுமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் முனுசாமி எம்எல்ஏ பங்கேற்று பேசியதாவது:- அதிமுகவின் 53-வது ஆண்டு விழா மாவட்டம் தோறும் சிறப்பாக நடந்தது. அவற்றில் நிர்வாகிகள் ஒற்றுமையுடன் பங்கேற்று வருகின்றனர்.
ஆனால், ‘அதிமுக மூன்று, நான்காக உடைந்து விட்டது’ என்று சிலர் கூறி வருகின்றனர். பதவிக்காக உழைத்த அடையாளம் தெரிந்ததால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்டுக்கோப்போடு உள்ள அதிமுக இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
இதே ஒற்றுமையுடன் செயல்பட்டு, வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஒன்றிய செயலாளர் சைலேஷ்கிருஷ்ணன், ஒன்றிய அவைத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.