தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடை முன்னிட்டு நடிகர் விஜய்க்கு துபாயை சேர்ந்த நிறுவனம் பவுன்சர் வசதி செய்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஒட்டுமொத்த விக்கிரவாண்டியும் களைகட்டி உள்ளது.
மாநாடு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய்யின் பாதுகாப்பிற்கு வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்தின் பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
துபாயை தலைமையிடமாக கொண்ட ஜென்டர் செக்யூரிட்டீஸ் நிறுவனம் சார்பில் தவெக மாநாட்டிற்கு பவுன்சர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிறுவனம் உலக பிரபலங்களான டாம் குரூஸ், சல்மான் கான், அமிதாப் பச்சன், சச்சின், கபில்தேவ் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றது.
தற்போது அந்த நிறுவனம் நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உள்ளது. நடிகர் விஜய்க்கு இந்த நிறுவனம் முதல் முறை பாதுகாப்பு வழங்கவில்லை. ஏற்கனவே நடிகர் விஜய் நடத்திய கல்வி விருது, கட்சி அறிமுக விழா போன்ற நிகழ்ச்சிகளில், அவருக்கு பாதுகாப்பு வழங்கி உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.
மாநாட்டில் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. மேலும், முக்கிய பிரபலங்கள் யாரேனும் பங்கேற்கலாம் எனவும் தெரிகிறது. இதன் காரணமாக, துபாய் நிறுவனத்தின் பவுன்சர்கள் விஜய் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.