சென்னை : தமிழில் படங்கள் தயாரிக்கிறார் இயக்குனர் அட்லி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியில் ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கிய அட்லி, அதன் பிறகு வருண் தவான், கீர்த்தி சுரேஷை வைத்து ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்திருந்தார்.
இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த படம் தெறியின் ரீமேக் என்று கூறப்பட்டது. மும்பையிலேயே தங்கியிருந்தாலும் மாதம் ஒரு முறை சென்னைக்கு வந்த செல்கிறாராம்.
இதன் மூலம் தமிழில் மீண்டும் படம் தயாரிக்க திட்டமிட்டு வருகிறார் என்று திரை உலக வட்டாரங்கள் கூறுகின்றன. இவர் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.