சென்னை: சென்னையில் ஆட்டோக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் பெண் கடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, காவல் துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே இயக்க முடியும்
வாகனப் பதிவு எண்கள் சரியான முறையில் ஆட்டோவில் தெரியும் படி இருக்க வேண்டும், இல்லையென்றால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். பயணிகள் ஆட்டோவில் ஏறும்போது அடையாள அட்டை, இந்த பேருந்து நிறுத்தத்தில்தான் ஓடுகிறதா என்பதை பார்த்து பயணிக்க வேண்டும்” என காவல் துறை தெரிவித்துள்ளது.