உக்ரைன்-ரஷ்யா மோதலை பைடன் நிர்வாகம் தவறாகக் கையாண்டதாகவும், தனது முந்தைய நிர்வாகத்தின் போது ரஷ்யாவுக்கு வருத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். தான் ஆட்சியில் இருந்திருந்தால் உக்ரைன்-ரஷ்யா போர் வெடித்திருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தே டிரம்ப் கூறி வந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதன்படி, தான் அதிபராக பதவியேற்ற நாள் முதல் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறார். இருப்பினும், சமீபத்தில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பு சுமூகமாக நடக்கவில்லை. ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு, அடுத்த கடுமையான நடவடிக்கையாக உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அனைத்து ராணுவ உதவிகளையும் திரும்பப் பெற டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தை முந்தைய பிடன் நிர்வாகம் தவறாக கையாண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அதிபர் ஜார்ஜ் புஷ் காலத்தில் தான், ஜார்ஜியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது. பின்னர் பராக் ஒபாமாவின் ஆட்சியில் ரஷ்யா தனது இராணுவ மற்றும் கடற்படை பலத்தை விரிவுபடுத்தியது. இது நீர்மூழ்கிக் கப்பல் தளங்கள் மற்றும் இராணுவத் தளங்களுடன் தனது அதிகார வரம்பை விரிவுபடுத்தியது. ஜோ பிடனின் ஆட்சியில் ரஷ்யா உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முயன்றது. இதற்கிடையில் நான் அதிபராக இருந்தபோதுதான் ரஷ்யாவுக்கு அமெரிக்காவிடமிருந்து வருத்தத்தைத் தவிர வேறு எதுவும் கிடைத்தது. எனவே, இப்போது உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் நான் தலையிட வேண்டும். இல்லையெனில், உக்ரைன் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும். இப்போது ஒரு முடிவு எட்டப்பட வேண்டும்.
இல்லையேல் அங்கு அதிகமானோர் கொல்லப்படுவார்கள். அவர்கள் கொல்லப்பட வேண்டிய அவசியம் இல்லை. இங்கு ஒன்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். டிரம்ப் ரஷ்யாவுக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆனால், முந்தைய ஜனாதிபதிகள் ரஷ்யாவுக்கு நிறைய கொடுத்தார்கள், எல்லாவற்றையும் கொடுத்தார்கள். இந்த நேரத்தில், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, உக்ரைன் மட்டுமல்ல, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
அந்த வகையில், சம்பந்தப்பட்ட அனைவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது, விரைவில் முடிவு எட்டப்படும். பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது. உக்ரேனிய மக்களும் போரை நிறுத்த விரும்புகிறார்கள். ஏனெனில் அவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், இந்தப் பிரச்னை தீர்ந்துவிடக் கூடாது என்று யாராவது நினைத்தால், இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வரமாட்டார்கள். இவ்வாறு டிரம்ப் கூறினார். டிரம்பின் பேச்சு ஜெலென்ஸ்கிக்கு மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. டிரம்ப் பலமுறை ஜெலென்ஸ்கியை ஏமாற்றி அதிபராக தொடர்வதாக விமர்சித்துள்ளார். டிரம்ப் ஒரு படி மேலே சென்று ஜெலென்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று விமர்சித்தார். இந்நிலையில் டிரம்பின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.