By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஹெஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்
    0 Min Read
    ரூ.100 கோடி மதிப்பிலான 250 கிலோ கொக்கைன் கடத்தி வந்த 6 பேர் கைது
    1 Min Read
    உயிருடன்தான் இருக்கிறேன்… மீண்டும் வீடியோ வெளியிட்ட நெதன்யாகு
    1 Min Read
    துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
    1 Min Read
    ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    விமானங்களில் குறைந்தது 60 சதவீத இருக்கைகளுக்கு சீட் தேர்வு கட்டணம் கூடாது என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
    1 Min Read
    மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்‌ஷம் செயலி அறிமுகம்
    1 Min Read
    ரீல்ஸ் எடுக்கும் போது விபரீதம்… துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வாலிபர் பலி
    1 Min Read
    அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு
    2 Min Read
    சிறுநீரகம் சிறப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியது இதைதான்!!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அதிகமாக முட்டைகோஸ் சாப்பிடுகிறீர்களா… கவனம் தேவை
    2 Min Read
    மழைக்காலத்தில் உடல் நலனை பராமரிக்க என்ன செய்யணும்!!!
    2 Min Read
    ஆரோக்கியத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் காய்கறிகள்
    1 Min Read
    மாசுக்களால் முடி உதிர்வதை தடுக்க எளிய குறிப்புகள்
    1 Min Read
    ஜனநாயகன் படம் வெளியாக அனுமதி கிடைக்குமா? அர்ச்சனா பட்நாயக் சொன்னது என்ன?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சாட்சியாக வந்த ஈசன், பிரளயத்தை காத்த விநாயகர் எங்கிருக்கிறார் தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > சாட்சியாக வந்த ஈசன், பிரளயத்தை காத்த விநாயகர் எங்கிருக்கிறார் தெரியுங்களா?
ஆன்மீகம்

சாட்சியாக வந்த ஈசன், பிரளயத்தை காத்த விநாயகர் எங்கிருக்கிறார் தெரியுங்களா?

Nagaraj
Last updated: March 20, 2026 8:43 am
By Nagaraj 4 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: சோழ வளநாடு சோறுடைத்து என்பார்கள். அதாவது நாட்டிற்கே உணவளிக்கும் பெரிய ஊர் தஞ்சாவூர்தான். காரணம் விவசாயம். இன்று அந்த பெயர் மறைந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய தஞ்சையின் வயல்கள் இன்று கான்கிரீட்டை (கட்டிடங்கள்) விளைவித்துள்ளன. ஆனால் என்று மாறாத பெருமை இந்நகருக்கு உண்டு. அதுதான் கோயில் நகரம். தஞ்சையை விட கும்பகோணம் கோயில்கள் நிறைந்த ஊர். திரும்பிய பக்கம் எல்லாம் கோயில்கள்தான்.

அப்படி கோயில்கள் நகராக விளங்கும் கும்பகோணத்திலிருந்து வடமேற்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்புறம்பயம். இங்கு எழுந்தருளியுள்ளார் சாட்சிநாத சுவாமி. இவருக்கும் தனிப்பெருமை உண்டு. இக்கோயிலில் வீற்றிருக்கும் பிரளயம் காத்த விநாயகருக்கும் அதிக பெருமை உண்டு. இவ்வாறு பக்தர்களுக்கு நலம் பொழியும் தந்தை, மகன் கோயில் என்றே சொல்லலாம்.

முதலாம் ஆதித்தசோழனின் சாம்ராஜ்யத்தின் வெற்றிக்கு அடித்தளமாகவும், சோழ வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. வீரத்தின் விளைநிலம் திருப்புறம்பயம். ஆகவே இத்திருத்தலம் திருப்புறம்பயம் ஆனது. நால்வரால் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தல வரிசையில் 46-வது திருத்தலமாகும் இக்கோயில். பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் 64-வது படலமான சாட்சிநாத படலத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது இக்கோயில். இக்கோயிலின் தலவிருட்சம் (மரம்) புன்னை மரம். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை கொண்டது என்று கூறப்படுகிறது. புராணப் பழமையும், வரலாற்றுப் பெருமையும் மிக்க இக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையிலும் சிறப்புமிக்கது ஆகும். இக்கோயிலில் மாசி மாதத்தில் நடைபெறும் பிரமோற்சவமும், ஆவணி மாதத்தில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவும், குருபெயர்ச்சி விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோயில் சிவன் கோயில் ஆகும். இங்குள்ள மூலவர் சாட்சிநாதேஸ்வரர், புன்னைவனநாதர், சாட்சீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம் இருக்குங்க. சாட்சி என்றால் என்ற தம் முன்னால் நடக்கும் ஏதோ ஒரு காரியத்தை அப்படி சொல்வதே சாட்சி. அதேபோல்தான் இத்தல சுவாமியும் சாட்சி சொன்னதால் சாட்சிநாதேஸ்வரர் ஆனார். அது எப்படி தெரியுங்களா?

இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தடியில் வந்து தங்கினான் அரதனகுப்தன் எனும் தனவணிகன். இவனுடன் வந்த பெண் ரத்னாவளி. அப்போது தனவணிகளை பாம்பு தீண்டியது. இதை கண்ட ரத்னாவளி புன்னைவன நாதரிடம் உருக்கமாக புலம்பினாள். அந்த பெண்ணின் கண்ணீரால் கருணை கொண்ட ஈசன் தனவணிகனை உயிர்ப்பித்தார். பின்னர் இருவருக்கும் தானே முன்னின்று திருமணம் செய்து வைத்தார். எத்தகைய பெருமை இது.

பின்னர் அந்த தனவணிகனின் மூத்த மனைவி இதுகுறித்து மதுரையில் வழக்கு தொடுத்தார். இதனால் புறப்பியத்து ஈசனான புன்னைவனநாதர் இல்லத்து மடைபள்ளி, வன்னிமரம், கிணறுசகிதமாய் மதுரையில் காட்சியளித்து சாட்சி உரைத்தார். அதாவது திருமணம் நடந்ததற்கு சாட்சியாக நின்றார். இதுகுறித்த சான்று மதுரை அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஈசான்ய பாகத்தில் கற்றிளி உருவில் காணலாம். இதனால்தான் இத்தல ஈசன் சாட்சிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற, செவ்வாய்கிழமை தோறும் 11 வார அர்ச்சனையும், 63 நல்லெண்ணெய் தீபமும், பரிகார ஹோமமும், அபிஷகமும் செய்தால் நல்லது நடைபெறும் என்பது ஐதீகம். இப்படி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்த சாட்சிநாத சுவாமியை பக்தர்கள் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்வது இக்கோயில் வரலாறு. அதுமட்டுமா? சாட்சிநாத சுவாமியை வழிபடும் பக்தர்களுக்கு பூர்வ ஜென்ம பாவ விமோசனமும், இப்பிறப்பில் நல்ல சிந்தனைகளும் கிடைக்க பெறும் என்று நம்பப்படுகிறது. இது தல ஈசனின் பெருமை என்றால் இக்கோயிலில் வீற்றிருக்கும் பிரளயம் காத்த விநாயகரின் பெருமை உலகறிந்தது. அதை பற்றி பார்ப்போம்!

தந்தையே இவ்வளவு பெருமை மிக்கவர் என்றால் தனயன் அதையும் தாண்டி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராகு அந்தர கற்பத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது (வெள்ளக் காலம்) அந்த பிரளயத்தில் இருந்து திருப்புறம்பயத்தை தன் கருணையால் காத்தார் இத்தல விநாயகர். அதனால்தான் இவருக்கு பிரளயம் காத்த விநாயகர் என்று பெயர் வந்தது.

வெள்ளம் போன்ற துன்பங்களில் இருந்து பக்தர்களை காப்பாற்றுபவர் என்பதற்கேற்ப விநாயகர் பெயர் பெற்று விளங்குகிறார். மற்ற அனைத்து இடங்களில் இல்லாத சிறப்பு அம்சம் இக்கோயில் விநாயகருக்கு உண்டு. பிற இடங்களில் சிற்பமாக அதாவது உலோகம், கற்களால் ஆன சிலையே விநாயகருக்கு இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் இங்குள்ள விநாயகர் எப்படி இருக்கிறார் தெரியுங்களா?

நத்தான் கூடு, கிளிஞ்சல், கடல்நுரை இவற்றாலான தெய்வத் திருமேனி கொண்டவர் இத்தல விநாயகரான பிரளயம் காத்த விநாயகர். வருண பகவானால் பிரதீஷ்டை செய்யப்பெற்ற விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தித் திருநாளில் இரவு முழுவதும் தேனால் அபிஷகம் செய்யப்படுவதுதான் மிகப்பெரிய விசேஷம். எப்படி தெரியுங்களா? லிட்டர் லிட்டராக தேன் அபிஷேகம் நடக்கும். சுவாமிகளுக்கு செய்யப்படும் அபிஷேக பொருள் திருமேனியில் பட்டு வெளியேறும். ஆனால் இத்தல விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேக தேன் முழுவதும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதுதான் ஆச்சரியம், அதிசயம்…நம் கண்முன்னே நடக்கும் கண் நிறைந்த காட்சியாகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று பிரளயம் காத்த விநாயகரை தரிசனம் செய்தால் சர்வ சங்கடங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். மற்ற நேரங்களில் இவ்விநாயகருக்கு எவ்வித அபிஷேகமும் நடப்பதில்லை. திருமேனி உறிஞ்சி தேன் என்னவாகிறது என்பது யாருக்கும் தெரியாத பெரும் அதிசயம். பிரளயகாலத்தில் அத்தனை தண்ணீரையும் உள்ளிழுத்ததால் பெயர் பெற்ற இந்த விநாயகர் தேனையும் அப்படியே தன் திருமேனியில் எடுத்துக் கொள்கிறார். அதிசயங்களும், பக்தர்களுக்கு அருளையும் அள்ளித்தரும் இத்தலத்தை கண்டு தரிசிப்போம்.

You Might Also Like

குழந்தை வரம் அருளுகிறார் கொடுமுடிநாதர்… பக்தர்களின் குறை தீர்க்கும் அற்புத தலம்

கீத உபதேசத்தை மனதில் நிறுத்தி வாழ்ந்தலே சிறப்பாகும்

சங்க காலத்திலே புகழ்பெற்ற திருக்காஞ்சி தலம்

பிரம்மாவிற்கு பதிலாக சூரியன் கடவுள் உள்ள தலம் எங்கு தெரியுங்களா?

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

TAGGED:lord ganeshathe belief that all troubles will be removedthe one who saved the floodஐதீகம்சர்வ சங்கடங்கள்திருமேனிநீங்கும்பிரளயம் காத்தவர்விநாயகர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
ஆன்மீகம்

குழந்தை வரம் அருளுகிறார் கொடுமுடிநாதர்… பக்தர்களின் குறை தீர்க்கும் அற்புத தலம்

By Nagaraj 4 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?