உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கும் பிராண பிரதிஷ்டை விழா ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவுக்குப் பிறகு, ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து பலராமரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்து நாட்காட்டியின் படி, பிராண பிரதிஷ்டா விழா சுக்ல பக்ஷ துவாதசி திதியில் நடைபெற்றது.
இந்நிலையில் 2025 ஜனவரியில் சுக்ல பக்ஷ துவாதசி திதி வரும் 11-ம் தேதி வருகிறது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், கோவிலின் முதலாம் ஆண்டு விழா, ஜனவரி, 11-ம் தேதி முதல், 3 நாட்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளது. இந்த 3 நாட்கள் விழா, ‘பிரதிஷ்டா துவாதசி’ எனப்படும்.

அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “கோயிலின் பிராண பிரதிஷ்டை விழாவில் அழைக்கப்படாத அல்லது பங்கேற்க முடியாத சாதுக்களை இந்த மூன்று நாள் திருவிழாவிற்கு அழைக்க திட்டமிட்டுள்ளோம். பெயர்கள் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. தர்மாச்சாரியாரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். சம்பர்க் பிரமுக் அசோக் திவாரியிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார்.”
முதலாம் ஆண்டு விழாவையொட்டி, ராமர் கோயில் வளாகத்தில் 5 இடங்களில் நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் யாகசாலை பூஜைகளும் இடம்பெறும் என அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் அறிவித்துள்ளார்.