அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ளது மற்றும் அஜித்தின் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

படத்தில், கேங்ஸ்டர் ஆக நடித்த அஜித், தனது மனைவி திரிஷா சொன்ன காரணத்துக்காக ஜெயிலுக்கு போகிறார். மகனின் பதினெட்டாவது பிறந்த நாளை கொண்டாட விரும்பும் அவர், ஜெயிலரின் உதவியுடன் வெளியே வருகிறார். ஆனால், வெளியே வந்தபோது அவரது மகனை யாரோ கடத்திவிட்டதாக அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். மகனை மீட்க அவர் மேற்கொள்ளும் போராட்டமே இப்படத்தின் கதை.
பழைய பாணிக் கதையாக இருந்தாலும், தன் ரசிகர்களுக்கு துள்ளலான ஒரு மசாலாப் படத்தைக் கொடுத்து அஜித் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளார் ஆதிக்.
இந்நிலையில், இந்த படத்தைச் பார்க்க சென்னை தியேட்டர் சென்ற அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா, ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து, “நீங்க ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றங்களைக் நடத்திருக்கலாம். அது இல்லாதப்பவே இப்படி கலாட்டா பண்றீங்களேடா” என செல்லமாக கோபித்துக் கொண்டார்.