அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதற்குப்பின், உலகளவில் படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது படம் நான்காவது வாரத்தை கடந்துள்ள நிலையில், ‘ரெட்ரோ’ மற்றும் ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்ததால், பல திரையரங்குகளில் ‘குட் பேட் அக்லி’ மாறி விடப்பட்டது. இதனால், படம் தனது தியேட்டர் வாழ்நாளை முற்றிலுமாக முடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மே 9ஆம் தேதி முதல் ‘குட் பேட் அக்லி’ நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படம் வெளியாகவுள்ளதால், திரையரங்கில் பார்ப்பது போன்று அனுபவத்தை தங்கள் வீட்டிலேயே படத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கிறது.