சென்னை : இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் அல்லு அர்ஜுன் என்று தகவல்கள் வெளியாகி சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கி உள்ளது.
தமிழில் வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது.
இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதை உறுதி செய்துள்ளார்.
அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் இணையும் படத்தில் இளம் இசையமைப்பாளர் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் கடைசியாக நடித்து வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.
அதேப்போல் அட்லீயுடன் இணைந்து நடிக்கும் இந்த படமும் பெரும் வசூலை பெற்று வெற்றி படமாக இருக்கும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஷாருக்கான் நடிக்கும் பதான் 2 திரைப்படத்தில் வில்லனாக அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.