சென்னை: செவன் பிக்சர்ஸ் சார்பாக சத்யப்ரியா ‘அனல்’ படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சத்யப்ரியா கதையின் நாயகியாக நடிக்கிறார், முன்னணி நட்சத்திரங்கள், ஒளிப்பதிவு – ராஜேஷ் குமார், இசை – ரெஞ்சித் வாசுதேவ், எழுத்து, இயக்கம் – ஏ. குரு.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ‘வளையல்’ படத்தை ஏற்கனவே இயக்கியுள்ளார். பாலியல் வன்கொடுமையால் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ‘அனல்’ படம் சொல்கிறது.

அதற்கு அவர்கள் எவ்வாறு நீதி பெறுகிறார்கள் என்பது ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இது விரைவில் வெளியாகும்.