பூவெல்லாம் உன் வாசம், துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எழில், சிவகார்த்திகேயன் நடிப்பில் “மனம் கொத்திப் பறவை” என்ற படத்தை இயக்கினார்.
இதில் ஹீரோயினாக ஆத்மியா நடித்தார். இந்த படத்தில் ஸ்ரீநாத், வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கம் புலி, இளவரசு, சாம்ஸ், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய பங்கு வகித்தனர். இப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானபோது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
கேரளத்தைச் சேர்ந்த நடிகை ஆத்மியா 2009 ஆம் ஆண்டு வெளியான “வெள்ளத்தூவல்” படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் “மனம் கொத்திப் பறவை”, “போகடி நீங்களும் உங்க காதலும்”, “அமீபா”, “காவியன்”, “வெள்ளை யானை” உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். தமிழிலும், மலையாளத்திலும் நடித்த இவர், 2021 ஆம் ஆண்டில் கண்னூரில் சனூப் கே நம்பியாரை திருமணம் செய்தார்.
திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலகி, எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார் ஆத்மியா. ஆனால் அழகும் திறமையும் கொண்ட இவர் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பாரா எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது, இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.