
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்கள் மு.மாறன் அடுத்த இயக்கியுள்ள படம் பிளாக்மெயில். ஜி.வி. பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். தேஜு அஸ்வினி ஹீரோயினாக நடிக்க, ஸ்ரீகாந்தும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரிப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் மு.மாறன் கூறும்போது, “எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம் டிராமா கதை இது.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. “நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பிஸியாக இருந்தாலும், ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு முழு ஆதரவை அளித்துள்ளார். அவர் தனது டப்பிங்கைத் தொடங்கியுள்ளார். அனைத்துப் பணிகளும் விரைவில் முடிவடையும்” என்றார்.